Sunday, August 21, 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(டி.என்.டி.ஜே) தனி மனித இயக்கம ? இது எந்த அளவுக்கு உண்மை?


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ளவர்கள் பி. ஜைனுல் ஆபிதீன் என்ற தனி மனிதனை தக்லீத் (கண் மூடிப் பின்பற்றுதல்) செய்கின்றனர் என்பது தான் தற்போது செய்யப்படும் பிரச்சாரம். இது எந்த அளவுக்கு உண்மை?


! எந்த மனிதனையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற இஸ்லாத்தில் அனுமதி இல்லை. எனவே தவ்ஹீத் ஜமாஅத்திலும் இதற்கு அனுமதி இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்துவோர் அதற்கான சான்றுகளை எடுத்துக்காட்டி அதை நிரூபிக்க வேண்டும். இந்த விஷயத்தில் குர்ஆன் வசனம் இப்படிக் கூறுகிறது. நபிவழி இப்படிக் கூறுகிறது. அதற்கு மாற்றமாக பி. ஜைனுல் ஆபிதீன் இவ்வாறு கூறுகிறார். அதை தவ்ஹீத் ஜமாஅத்தினர் கண்ணை மூடிப் பின்பற்றுகிறார்கள் என்று குறிப்பிட வேண்டும். அல்லது தவ்ஹீத் ஜமாஅத்தின் உரைகளில் ''நாங்கள் மார்க்கம் என்று எதை உங்களுக்குச் சொல் கிறோமோ அதைக் கண்ணை மூடி ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நமது மேடைகளில் இதற்கு எதிராகத் தான் பேசப்பட்டு வருகின்றது. நாங்கள் சொல்வது குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருந்தால் அதைப் பின்பற்றாதீர்கள் என்பது தான் 25 ஆண்டுகளாக நமது பிரச்சாரமாக இருந்து வருகிறது. எனவே பி. ஜைனுல் ஆபிதீனையோ வேறு எந்த மனிதரையுமோ இந்த ஜமாஅத் ஒருக்காலும் தக்லீத் செய்ததில்லை. இனியும் செய்யாது. இந்த இடத்தில் ஆச்சரியமான ஒரு உண்மையை விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். பி. ஜைனுல் ஆபிதீனை சிலர் தக்லீத் செய்திருந்தனர். அவர்கள் தக்லீத் செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாமல் இருந்தது. யாரெல்லாம் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்தார்களோ அவர்களில் ஒருவர் கூட பி. ஜைனுல் ஆபிதீனுடன் இன்று இல்லை. யார் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்யாமல் குர்ஆனையும் நபி வழியையும் பின்பற்றினார்களோ அவர்கள் மட்டும் தான் பி. ஜைனுல் ஆபிதீனுடன் உள்ளனர். இதைத் தக்க ஆதாரத்துடன் தான் சொல்கிறோம். நம்மோடு சேர்ந்திருந்து விட்டு தடம் புரண்டு விட்ட இயக்கத்தின் தலைவர் தனது பெயரில் வெளியிட்ட பிரசுரத்தில்,
''இவரது பேச்சைக் கேட்டு நிறைய தவறுகளைச் செய்து விட்டோம்; அதற்காக சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்கிறோம்''
என்று கூறியிருக்கிறார். இதை வேறு பல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் பொருள் என்ன? இது காலம் வரை எங்கள் மூளையை அடகு வைத்து விட்டு பி. ஜைனுல் ஆபிதீன் என்ன சொன்னாலும் தலையாட்டி வந்தோம். சமுதாயத்துக்கே துரோகம் செய்து வந்தோம்; என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை. அதாவது இவர்கள் சுய சிந்தனையை அடகு வைத்து விட்டு ஒரு மனிதன் சொன்னதைத் தக்லீத் செய்துள்ளனர். அந்த மனிதன் மீது வெறுப்பு ஏற்படும் வரை அவன் செய்யச் சொன்ன எல்லா அக்கிரமத்தையும் செய்து வந்தனர். சமுதாயத்திற்கு துரோகம் செய்யச் சொன்னாலும் அதையும் செய்தனர். நல்லவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தத் தனி மனிதன் சொன்னால் அதையும் செய்தனர். காட்டிக் கொடுக்கச் சொன்னால் காட்டிக் கொடுத்தனர். இவர்கள் செய்த அனைத்துமே இவர்களால் சிந்தித்துச் செய்ததல்ல, ஒரு மனிதனைக் கண் மூடிப் பின்பற்றிய தால் தான் இவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தது. எனவே தான் பி. ஜைனுல் ஆபிதீனை தக்லீத் செய்தவர்கள் அனைவரும் அவரை விட்டு ஒதுங்கி விட்டனர். நியாய அநியாயங்களைச் சீர்தூக்கிப் பார்த்தவர்கள் மட்டும் நியாயத்தின் பக்கம் நின்று விட்டனர். அதே இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் சிலர் ஏப்ரல் 10க்குப் பின் தொழுகையில் விரல் அசைப் பதை விட்டு விட்டனர். இதற்குக் காரணம் என்ன? நபிவழியை விளங்கி அதில் நம்பிக்கை வைத்து அதை அவர்கள் செய்யவில்லை. ஒரு மனிதனைக் கண்மூடி பின்பற்றியிருக்கிறார்கள். அந்த மனிதன் இவர்களுக்கு எதிரியானவுடன் சுன்னத்தை விட்டு விட்டு புது வியாக்கியானம் கூற ஆரம்பித்து விட்டனர். பி. ஜைனுல் ஆபிதீனை கண்மூடிப் பின்பற்றியவர்கள் அவரை விட்டுப் போய்விட்டனர் என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது. ஏகத்துவப் பிரச்சாரத்தை ஒருவரது தலைமையில் நாம் செய்து வந்தோம். அவரது நடவ டிக்கை சரியில்லை என்பதால் அவரை மாற்றி விட்டு வேறு தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறோம். அந்த முன்னாள் தலைவர் கடந்த பிப். 27 அன்று நாகூரில்,
''அவர் கறுப்பை வெள்ளை என்று சொன்னால் நானும் வெள்ளை என்று கூறினேன். அவர் வெள்ளையை கறுப்பு என்று கூறினால் அவ்வாறே நானும் கூறினேன். 15 வருடங்க ளாக அவர் என்ன சொன்னாலும் அதைச் சரிகண்டு வந்தேன்''
என்று பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். (மக்களெல்லாம் சுற்றி வளைத்து மடக்கிய போது தப்பித்தோம் பிழைத்தோம் என்று பின் வாங்கி ஒட்டம் பிடித்தார் என்பது தனி விஷயம்) 15 வருடங்களாக ஒரு மனிதன் கருப்பை வெள்ளை என்று கூறி யிருக்கிறான். தெரிந்து கொண்டே அதற்குத் தலையாட்டியுள்ளனர் என்றால் அதற்குப் பெயர் தானே தக்லீத். இந்த உண்மையை(?) கூட எப்போது சொல்கிறார்கள்? தூக்கி எறியாமல் இருந்திருந்தால் இன்னும் அதே தக்லீதைத் தான் செய்திருப்பார்கள். தக்லீத் எனும் மாபாவத்தைச் செய்த இவர்கள் தக்லீதை எதிர்த்து உறுதியான நிலைப்பாட்டை எடுத்தவர்கள் மீது இப்பழியைச் சுமத்துகின்றனர். இந்த இரண்டு குரூப்பைத் தவிர இன்னொரு குரூப்பினரும் இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துகின்றனர். ஏகத்துவ பிரச்சாரப் பணியைச் செய்வதற்காக நாம் கண்ட முதல் அமைப்பைச் சேர்ந்தவர்களைத் தான் குறிப்பிடுகிறோம். அமீர் சொல்வதை யாரும் எதிர்க்கக் கூடாது. மார்க்க விஷயமானாலும் நிர்வாக விஷயமானாலும் அமீரின் சொல்லை எதிர்க்கக் கூடாது என்று புத்தக மாகவே போட்டு பிரகடனம் செய்துள்ளனர்.மார்க்க விஷயத்தில் கூட அந்த அமைப்பின் தலைவர் கூறுவதைக் கண்மூடிப் பின்பற்ற வேண்டும். அதை ஏற்பவர்கள் தான் இந்த அமைப்பில் இருக்க முடியும் என்று தெள்ளத் தெளிவாக அறிவிப்பது தான் தக்லீத். அதை ஏற்பது தான் தக்லீத். தக்லீதைக் கொள்கையாகக் கொண்ட இந்தக் கூட்டணி தான் நம்மீது அந்தப் பழியை போடுகிறது. அர்த்தமற்ற இது போன்ற உளறல்களை நிறுத்தாவிட்டால் அவர்களின் தக்லீத் பட்டியல் விரியும். அவமானம் சேரும்.
அழைப்பு பணியில் என்றும் அன்புடன்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(டி.என்.டி.ஜே)


புதுமடம் கிளை


ஞாயிறு, 3 மே, 2009


வாசகர்கள் பயன் பெறுவதற்காக நமது இனையதளதில் புதிய வசதி தினமும் Update செய்யப்படும் நமது இனையதில் பல விடியோ அடியோ மற்றும் இஸ்லாமிய கட்டுரைகளை டவுன்லோட் செய்துகொள்ளலாம் Click Here to Visit


இவர்களுக்கா உங்கள் ஆதரவு ?


அன்பு சகோதர சகோதரிகளே உங்கள் அனைவரின் மீதும் அந்த ஓர் இறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்டும் நிலவட்டுமாக.



மே 13 நமது தமிழகத்துக்காண நாடாளுமண்ற தேர்தல் தேதி என்று தேர்தல் ஆனையத்தினால் நிர்னையிக்கப்பட்ட தேதி.


இந்நிலையில் ஒரு ஒரு சமுதாய மக்களும் தங்களுக்கு யார் சரியான வேட்பாளர்கள் என்று முடிவேடுக்க துவங்கி விட்டனர்.


நமது இஸ்லாமிய சமுதாயத்தை பொறுத்தவரை இரண்டு கட்சிகள் போட்டியிடுகின்றனர் அதில் ஒன்று முஸ்லீம் லீக் மற்றோண்டு தங்களை சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் என்று கூறிக்கொள்ளும் தமுமுக (ம.ம.க).


நம் சமுதாய மக்களை பொறுத்தவரை முஸ்லீம் வேட்பாளர் என்று மட்டும் பார்த்து வாக்களிக்க முன்வருபவர்கள் பலர் உள்ளனர். இதனை குறை சொல்லவில்லை நமது சமுதாயத்தின் ஒரு ஒரு தனி மனிதனின் ஆசையும் ஆதங்கமும் தான் நமக்கேன்று ஒரு வழுவான அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் வேண்டும் என்பது.


அப்படிப்பட்ட ஆதங்கத்தில் தான் முஸ்லீம்களில் பலர் மனித நேய மக்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளனர்.மாறாக இவர்கள் பொறுப்பில் வந்தால் நமது சமுதாயத்திற்க்கு ஏதேனும் பயண் உள்ளதா அல்லது நமக்கு இவர்களால் பிரச்சனை தான என்பதை யாரும் சிந்திப்பதிலை.


எல்லாவற்றிக்கும் மேலாக இஸ்லாம் தலைவர்களை தேர்ந்தேடுப்பதில் என்ன கூறியுள்ளது என்பதையும் யாரும் யோசிப்பதில்லை.


தகுதியற்றவரை பொறுப்பில் அமர்த்துவது மறுமை நாளின் அடையாளமாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.


நாம் நாடு என்று இப்போழுது யோசிக்க வேண்டாம் இஸ்லாமிய அடிப்படையிலும் சமுதாய அடிப்படையிலும் சற்று சிந்தித்துப் பார்ப்போம்.


முதலாவதாக நாம் முஸ்லீம் லீக்கை எடுத்துக் கொள்வோம் இவர்களும் நம் சமுதாயத்தை முன்னேற்றப் போகின்றோம் என்று முழக்கமிட்டு அரசியலில் களம் கண்டவர்கள் தான். ஆனால் இவர்களின் நிலையை இன்று நமது சமுதாயமே புரிந்து இவர்களை ஒதுக்கி வைத்திருப்பதை நாமே கண்கூடாக பார்கின்றோம். இருந்தாலும் இவர்கள் செய்து வரும் இஸ்லாமிய மற்றும் சமுதாய விரோத போக்கை இங்கு குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ளேன்.


இவர்கள் அரசியளுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள் என்பதை கீழே கொடுத்துள்ள படத்தை பார்த்து புரிந்துக் கொள்ளுங்கள்.


 





  • அல்லாஹ்வை மட்டும் பணிய வேண்டிய சிணம் அற்ப மனிதனுக்கு பணிகிறது...

  • அரசியல் ஆதாயத்திற்காக அல்லாஹ்வின் வார்த்தைகளையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளையும் மறந்து சமியாரை கைக் கூப்பி வணங்கும் இவருக்கா உங்கள் ஓட்டு ?

  • அடுத்ததாக காட்டப்பட்டுள்ள படத்திற்க்கு விமர்சனம் ஏதும் தேவை இல்லை என்று நினைக்கின்றேன்.
இன்னும் இவர்களைப் பற்றி கூற வேண்டும் என்றால் பல விஷயங்களை கூறலாம். மத்தியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு இன்னும் கிடைக்கவில்லை, குஜராத்தில் நமது முஸ்லீம் சமுதாயத்திற்க்கு எதிராக அடக்குமுரையையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர் இதற்க்கு எல்லாம் தனது எம்.பி பதவியை இரஜினாமா செய்யாத இவர் இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதர்க்காக எம்.பி பதவி இராஜினாம என்ற நாடகத்தை நடத்தினாரே இதை நம்மால் மறக்க முடியுமா ?

அடுத்ததாக இலங்கையில் முஸ்லிம்களை கொண்று குவிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற மனித சங்கிளியில் இவர் கலந்து கொண்டது நமது சமுதாய விரோத போக்கை படம் போட்டு காட்டுகிறது.

அடுத்ததாக நம்முடைய முன்னால் சகாக்கள் பற்றி பார்ப்போம் இவர் செய்யும் சமுதாய மற்றும் மார்க்க விரோத போக்கை நம் இனையத்தளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதால் இதுவரை நம் இனையத்தளத்தில் வெளியிடதா உண்மைகளை வெளியிடுகின்றோன்.

முதலில் கலைஞருக்கு நன்றி அறிவிப்பு மாநாடு என்று தா.மு.மு.க வாரிய வீரர்கள் என்னென்ன கூத்துகளை அரங்கேற்றியுள்ளனர் என்பது பற்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.

24.11.2007 சனிக்கிழமை எங்களால்தான் இடஒதுக்கீடு கிடைத்தது என்று மார்தட்டிக் கொள்ளும் கழகக்காரர்கள் நன்றி அறிவிப்பு மாநாடு என்று பல ஊர்க்ளிலிருந்து கிளம்பினார்கள். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கூனிமேட்டில் பள்ளிவாசலுக்கு அருகே வந்து நின்றது பரங்கிப்பேட்டை கிளை என்று பேனர் எழுதப்பட்ட ஒரு வேன். அந்த வேனிலிருந்து கழகத் தொண்டர்கள் 10 பேர் ஏகப்பட்ட மப்பில், போதை தெளியாத நிலையில் குதித்து அருகில் இருந்த மளிகை கடையில் சிகிரெட்டை வாங்கி புகை விட்டார்கள். அப்போழுது அவர்களுக்கிடையே நடந்த உரையாடலை அனைத்து சகோதரர்களும் அறிந்து கொள்வதற்காக அப்படியே தருகின்றோம்.......

பாண்டிச்சேரி சரக்கு நல்லாதான் இருக்குப்பா... விலை குறைவு ‍கிக் ஜாஸ்த்தி. சரக்கு கம்மிய வாங்கிட்டு வந்துட்டோம்.... கலைஞரின் பொன் விழா அன்றைக்கு இதை விட இன்னும் ஜாஸ்த்தியா ஏத்திக்கிட்டு, வீரியமா வருவோம்..." 
இது தான் அவர்கள் போதையில் நிலை தடுமாறி கூறிய வார்த்தைகள் .

இப்படி ஒரு சம்ப‌வம் நடக்கவில்லை இது பொய்யான தகவல் என்று அவர்கள் வாதிட்டால் இதை கூனிமேடு டி.என்.டி.ஜே ஆதாரத்துடன் நிருபிக்க தயாராக இருக்கிறது.

பரங்கிப்பேட்டை கிளையும் ரெடி 
இந்த சம்பவத்தை கூனிமேடு டி.என்.டி.ஜே வை போல் பரங்கிப்பேட்டை டி.என்.டி.ஜே கிளையும் நிரூபிக்கத் தயாராக உள்ளது.

இரண்டாவதாக த.மு.மு.க பாலுசெட்டிச்சத்திரம் கிளை அஜீத் ரசிகர் மன்றத்தில் இனைந்த கூத்து. இந்த கூத்திற்க்கு விமர்சனம் தேவை இல்லை என்று தான் நினைக்கின்றேன்.

மூன்றாவதாக திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் அரங்கேறிய கூத்து.

நான்ங்காவதாக முத்துப்பேட்டையில் இறைவனுக்கு எதிராகவும் கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர்களோடு கைகோர்த்த கூத்து .

சகோதர ச‌கோதரிகளே சற்று சீந்தித்து பாருங்கள் அல்லாஹ் இப்படிப் பட்டவர்க்ளுடன் தான ஒற்றுமையை காக்க சொல்கின்றான் .

யாருடன் தேவை ஒற்றுமை ?

பரங்கிப்பேட்டையை சேர்ந்த இந்திய கு(டி)மகன்களுடன் ஒற்றுமையை அல்லாஹ் வலியுருத்துகின்றான.

பாலுசெட்டிச்சத்திரம் அஜீத் ரசிகர் மன்றத்தினரிடம் ஒற்றுமையை அல்லாஹ் நிலைநாட்ட கூறுகின்றான.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள இறைவனுக்கு இனைவைக்கும் இவர்க்ளுடன இனைய வேண்டும.

அல்லது கடவுள் இல்லை என்ற கொள்கையுடையவர்களோடு கைகோர்த்த இறைமறுப்பாளர்க்ளுடன் கைக்கோர்க்க வேண்டுமா

தா.மு.மு.க வில் இருந்து கொண்டு தவ்ஹீத் பேசும் அன்பு சகோதரர்களே இந்த இறை மறுப்பாளர்களை எதிர்த்து குரள் கொடுப்பது இறைவனால் உங்கள் அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்ட கடமையள்ளவா ?

நளைய சமுதாயமே !தா.மு.மு.க இளைஞர்களே இவர்களுடன் இருந்தாள் உங்கள் சமுதாயத்தை வரும் காலங்களில் எப்படி அல்லாஹ் கூறிய வழியில் காப்பற்ற போகிறீர்கள்.

தா.மு.மு.க விற்க்கு பொருளாதார உதவி புரியும் அன்பு நெஞ்சங்களே உங்கள் பனம் அல்டிமேட் அணியின் அற்ப்பமான நோட்டீஸ்களுக்கு செலவிடுவது உங்களுக்கு தெரியுமா.

த.மு.மு.க வின் இந்த நிலமையை பார்க்கும் போது பேராசிரியர் அன்று சொன்னது தான் நினைவில் வருகின்றது . த.மு.மு.க வின் வளர்ச்சிக்கு தவ்ஹீத்வாதிகள் தான் முட்டுக்கட்டை என்று கூரினாரே . ஒரு வேளை இதற்க்கு தான் முட்டுக்கட்டையாக இருந்தோம் என்று கூறினார் என்று நினைக்கின்றேன்.

அன்பு சமுதாய மக்களே சற்று சிந்தித்து பாருங்கள் ஒற்றுமை என்ற பெயரில் இவர்களை தான் நீங்கள் ஆட்சியில் ஏற்ற போகின்றீர்களா ? பதவியில் ஏற்ற போகின்றீர்களா ?
இவர்களை பதவியில் ஏற்றினால் நமது ஏகத்துவ கொள்கையும் சமுதாய நலனும் என்ன ஆகுவது.

சற்று சிந்தித்து பாருங்கள்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 3:104
என்று அல்லாஹ் நமக்கு கூறியுள்ளான் எனவே இது போன்ற மார்க்க மற்றும் சமுதாய துரோகிகளை அடையாளம் கண்டு இவர்களை பதவியில் ஏற்ற விடமல் தடுத்து இறைவன் கூறும் வெற்றி பெற்ற சமுதாயமாக நாம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக....

www.tntjmuthupet.com

Search